ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!

உக்ரைன் அதிகாரிகளின் உத்தரவின்படி செயல்பட்ட இளம்பெண் ரஷியாவில் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2025, 4:41 pm IST

உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், அந்நாட்டில் உக்ரைன் சிறப்புப் படையினரின் உத்தரவின்பேரில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக ரஷிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரஷிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், உக்ரைனின் சிறப்புப் படை அதிகாரிகளுடன் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திலுள்ள பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை அந்தப் பெண் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், அவரது காரில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை பொறுத்த முயன்றுள்ளார்.

இதையடுத்து, அவர் வெடிகுண்டை பொறுத்தியபோது ரஷிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த இளம்பெண் ரஷியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு நாட்டில் குடியுரிமைப் பெற திட்டமிட்டு, இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உக்ரைன் ஆதிகாரிகளின் உத்தரவின்படி அந்த இளம்பெண் அங்குள்ள ரயில்வே கட்டமைப்புகள் மீது தீ வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, மெட்டா நிறுவனத்தின், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளின் நடவடிக்கைகள் ரஷியாவில் தீவிரவாதச் செயலாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Russian security officials have arrested a 23-year-old woman for allegedly planning to carry out a terrorist attack in Russia on the orders of Ukrainian special forces officers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.