மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :5 ஜூலை 2025, 9:09 pm

Din

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை இடிருந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் இருந்து இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் எட்டு பேரை மீட்பு பணியாளா்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தித் தேடி வருகின்றனா் (படம்) என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டடம் குறுகலான தெருவில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதிக்கு கூடுதல் கனரக மீட்பு உபகரணங்களை கொண்டுவருவதில் சிரமம் உள்ளதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானில் கட்டுமான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததாலும், தரமற்ற பொருள்களால் பல கட்டமைப்புகள் கட்டப்படுவதாலும் அங்கு அடிக்கடி கட்டட விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.