6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னாப்பிரிக்க சரணாலயத்தில் யானை தாக்கி தொழிலதிபர் பலி!

தொழிலதிபர் யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
யானை தாக்கி பலி
Updated On :24 ஜூலை 2025, 11:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சரணாலயங்களில் ஒன்றின் இணை உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஃப்சி கான்ராடி யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோசல் விரிகுடாவிற்கு அருகிலுள்ள 27 ஏக்கர் வனவிலங்கு புகலிடமான கோண்ட்வானா தனியார் விளையாட்டு சரணாலயத்தில் ஜூலை 22 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது.

39 வயதான கான்ராடி வனவிலங்கு ஆர்வலர். சுற்றுலா விடுதிகளிலிருந்து யானைகள் கூட்டத்தை வழிநடத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஆறு டன் எடையுள்ள யானை ஒன்று கான்ராடியை தனது தந்தங்களால் குத்தி, பலமாகத் தாக்கி மிதித்துக் கொன்றது

சம்பவம் நடைபெற்றதற்கு அருகில் வனக்காப்பாளர்கள் கான்ராடியை காப்பாற்றி முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கான்ராடி யானைகள் மீது அதீத அன்பு கொண்டவர். யானைகளை புகைப்படம் எடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்த அவர், விலங்கியல், விலங்கு ஆய்வுகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கௌரவப் பட்டம் பெற்றவர்.

அவருக்கு மனைவி லா-இடா(33) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்குள் சரணாலயத்தில் ஏற்பட்ட இரண்டாது யானை தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்தாண்டு மார்ச்சில் வனக்காவலர் டேவிட் கண்டேலா(36) யானைகள் கூட்டத்தை வழிநடத்தும்போது யானை ஒன்று தாக்கி கொல்லப்பட்டார்.

எஃப்.சி. கான்ராடியின் இந்த மரணம் தென்னாப்பிரிக்காவின் பாதுகாப்பு சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது மற்றும் வனவிலங்கு காப்பகங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

summary

FC Conradie, the co-owner and CEO of one of South Africa’s most exclusive game reserves, was tragically killed after being trampled by an elephant while trying to guide the herd away from a tourist lodge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.