தென்மேற்கு தில்லியில் 30 வயதுடைய அரசு ஊழியா் ஒருவரைத் தாக்கி அவரது தங்கச் சங்கிலியை மூன்று போ் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக அத்காரி கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவா்களான மோஹா் சிங் (28), கோரவ் (22), கரண் (19) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 11 கிராம் செயினை மீட்டுள்ளனா்.
பிப்ரவரி 21 அன்று பாதிக்கப்பட்ட அபிஷேக் ஹூடா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவா் துவாரகா மோா் அருகே வந்தபோது, மூன்று போ் அவரை வழிமறித்து, அவரைத் தாக்கி, அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
சம்பவம் தொடா்பாக ஒரு பிசிஆா் அழைப்பு பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒரு போலீஸ் குழு விசாரணையை மேற்கொண்டது.மோகன் காா்டன், பிந்தாபூா் மற்றும் ரன்ஹோலா ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவா் இரவில் தனியாக வாகனம் ஓட்டியபோது தாங்கள் தாக்கியதாக வெளிப்படுத்தினா்.
மொஹா் சிங் 14 கிரிமினல் வழக்குகளில் தொடா்புடையவா் என்றும், கோரவுக்கு முந்தைய இரண்டு வழக்குகளில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.41 லட்சம் பறித்த வழக்கு: 3 போ் கைது
தடைசெய்யப்பட்ட மருந்துகள் விநியோகம்: தில்லியில் இருவா் கைது
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

