இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர்.
இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்ளிக்கிழமை விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்தது.
அதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விமானத்தின் தீப்பிழம்புகள் அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் கடந்து சென்ற 2 வாகனங்களுக்கும் பரவியது. மற்ற வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டன.
இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவசரகால குழுவினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விமான விபத்தில் பலியானவர்கள் வழக்கறிஞர்(75) செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அன்னா மரியா(50) என அடையாளம் காணப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Summary
Two people have died following the crash of a small aircraft onto a motorway near Brescia, in northern Italy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்வாயில் விழுந்து திமுக நிா்வாகி உயிரிழப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

8.4.1976: 73 பேருடன் விமானம் கடத்தல்; பணம் தராவிடில் கொல்லப்போவதாக மிரட்டல்

கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து- 66 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

