போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்ஏபி
Published on
Updated on
1 min read

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார். ஆனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் அதன் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈரானும் போர்நிறுத்தத்தை ஏற்பதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து இயக்கப்படும் அவசரகால சிறப்பு விமானங்களுக்காக மட்டும் அந்நாட்டின் வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்படுவதாக, இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரினால், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. இருப்பினும், அந்நாடுகளில் சிக்கியுள்ள வெளிநாட்டவரை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com