காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த, இருதரப்புக்கும் இடையில் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையானது கடந்த சில மணி நேரங்களாகத் தீவிரமடைந்துள்ளதாக, ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
“போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் எங்கள் சகோதரர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகியோருடனான எங்களது தொடர்பு நிறுத்தப்படவில்லை, கடந்த சில மணிநேரங்களாக அது தீவிரமடைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், போர்நிறுத்தத்துக்கான எந்தவொரு புதிய ஒப்பந்தத் திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: மல்லுக்கட்டும் இஸ்ரேல்

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை! வாஷிங்டனில் தொடங்கியது!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவத் தளபதி கொலை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



