வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
இது தொடா்பாக வங்கதேச அரசும் ஊழல் தடுப்பு அமைப்பும் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜியா அறக்கட்டளை வழக்கில் கலீதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் கடந்த நவம்பரில் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனா்.
மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை விடுதலை செய்ததது. கலீதா மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டுவருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிரான மனுக்கள்: விசாரணையை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கு: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆஜராவதிலிருந்து விலக்கு

56 போ் கொல்லப்பட்ட தொடா் குண்டுவெடிப்பு வழக்கு: 38 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை; குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



