தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.

News image

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள்..

Updated On :18 மார்ச் 2025, 7:48 pm IST

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான் யூனிஸ், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த கொடூரத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலின் கோரிக்கைகளை ஹமாஸ் நிராகரித்ததை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஹமாஸ் ஒத்துழைப்பு தராததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், காஸாவில் உள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாகத்” தெரிவித்துள்ளது.

ஹமாஸின் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரியான காஸாவின் உள்துறை துணை அமைச்சரான மொகமத் அபு வஃபா இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 19-ஆம் தேதி காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் நடைபெறும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். காஸா போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் போர் துவங்கியிருக்கிறது.

இதுவரை இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 48,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1.12 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.