திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image

தயார் நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் - IANS

Updated On :5 மே 2025, 9:51 pm IST

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும் அமைச்சரவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்த ராணுவ தலைமை அதிகாரி இயால் ஸமீர் தொடர்ந்து அறிவித்துவந்ததை அடுத்து இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (ஏப். 5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒருமனதாக காஸாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காஸா - இஸ்ரேல் இடையிலான போர் ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் படையினர் செயல்பட்டதால், காஸாவுக்கு உலக நாடுகள் வழங்கிவந்த மனிதாபிமான உதவிகளை மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் பல்வேறு வகைகளில் தடுத்து வருகிறது.

இஸ்ரேல் விதிகளை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காக எல்லைப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் உள்பட பல அத்தியாவசிய உதவிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறி வந்தது.

இந்நிலையில், எதிர்காலத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, காஸாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் தந்திரமான தாக்குதலில் இருந்து ஆக்கிரமிப்பை நோக்கி நாம் நகர்கின்றோம். காஸா மக்கள் விருப்பப்பட்டு நாட்டிலிருந்து வெளியேறுவதை ஊக்குவிக்கிறோம். காஸாவிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை ஏற்றுக்கொள்ளும்படி பல உலக நாடுகளுடன் பேசிவருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.