மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பங்குச்சந்தை சரிவு

News image
Updated On :8 மே 2025, 11:06 am

DIN

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவுள்ளதாக அந்நாட்டில் வதந்தி பரவியது. இதனையடுத்து, பாகிஸ்தானில் ஒருமணி நேரமாக வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக, கராச்சி பங்குச் சந்தை (KSE 100), வியாழக்கிழமையில் 6,948.73 புள்ளிகள் குறைந்து (6.32%) சரிவுடன் முடிவடைந்தது.

சிமெண்ட், எரிசக்தி, வங்கி, தொழில்நுட்பம் போன்ற முக்கிய பங்குகளின் எதிர்மறை விளைவுகளினால் பாகிஸ்தான் பங்குச் சந்தை சரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இன்றுமுதல் (மே 8) 60 நாள்களுக்கு விலைமதிப்பற்ற உலோகங்கள், நகைகள், கற்கள் (Gemstones) போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால், இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களின் பங்குகளை திரும்பப் பெற்றதால், அந்நாட்டு பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, தனது அந்நியச் செலாவணி இருப்புகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மேற்கு ஆசியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுமெனில், அவற்றில் 90 சதவிகித பரிமாற்றம் இந்தியாவைச் சேர்ந்த பரிமாற்ற நிறுவனங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நீடித்தால், இந்த நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.