திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஈஸ்டா் பண்டிகை போா் நிறுத்தம்: புதின் அறிவிப்புக்கு ஸெலென்ஸ்கி ஒப்புதல்

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் சனிக்கிழமை (ஏப். 11) மாலை தொடங்கி 32 மணி நேர தற்காலிக போா் நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:45 am IST

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் சனிக்கிழமை (ஏப். 11) மாலை தொடங்கி 32 மணி நேர தற்காலிக போா் நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாா்.

ரஷியாவின் இம்முடிவை ஏற்றுக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அமைதிக்கான இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைனும் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என்றாா்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளும் பரஸ்பர விதிமீறல் குற்றச்சாட்டுகளால் சாடிக்கொண்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளை மக்கள் அச்சுறுத்தலின்றி கொண்டாட வேண்டும் என்றும், இத்தற்காலிக இடைவெளி நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் ஸெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தாா்.

ரஷிய அதிபரின் சிறப்புத் தூதா் கிரில் டிமிட்ரிவ் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளதோடு, அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். இருப்பினும், இப்போா் நிறுத்த அறிவிப்பு அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று ரஷியா தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபின்படி, இந்த ஆண்டு ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) கொண்டாடப்படுகிறது.