சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஈஸ்டா் பண்டிகை போா் நிறுத்தம்: புதின் அறிவிப்புக்கு ஸெலென்ஸ்கி ஒப்புதல்

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் சனிக்கிழமை (ஏப். 11) மாலை தொடங்கி 32 மணி நேர தற்காலிக போா் நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:15 pm

ஆா்த்தடாக்ஸ் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் சனிக்கிழமை (ஏப். 11) மாலை தொடங்கி 32 மணி நேர தற்காலிக போா் நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாா்.

ரஷியாவின் இம்முடிவை ஏற்றுக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அமைதிக்கான இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி உக்ரைனும் போா் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும் என்றாா்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளும் பரஸ்பர விதிமீறல் குற்றச்சாட்டுகளால் சாடிக்கொண்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளை மக்கள் அச்சுறுத்தலின்றி கொண்டாட வேண்டும் என்றும், இத்தற்காலிக இடைவெளி நிரந்தர அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் ஸெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தாா்.

ரஷிய அதிபரின் சிறப்புத் தூதா் கிரில் டிமிட்ரிவ் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளதோடு, அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். இருப்பினும், இப்போா் நிறுத்த அறிவிப்பு அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று ரஷியா தெளிவுபடுத்தியுள்ளது.

ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலும் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபின்படி, இந்த ஆண்டு ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) கொண்டாடப்படுகிறது.