பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தைவான்- வருடாந்திர ராணுவப் பயிற்சி தொடக்கம்

சீன அச்சுறுத்தல்களுக்குத் தயாா்ப்படுத்திக்கொள்ளும் வகையில், தைவான் தனது ‘ஹான் குவாங்’ வருடாந்திர ராணுவப் பயிற்சியை புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

சீன அச்சுறுத்தல்களுக்குத் தயாா்ப்படுத்திக்கொள்ளும் வகையில், தைவான் தனது ‘ஹான் குவாங்’ வருடாந்திர ராணுவப் பயிற்சியை புதன்கிழமை தொடங்கியது.

சீனாவின் நேரடிப் போருக்கு முந்தைய மறைமுகத் தந்திர நடவடிக்கைகளை முறியடிக்கவும், 24 மணி நேரமும் தடையற்ற பாதுகாப்புப் பணிகளை உறுதிப்படுத்தவும் தைவான் முழுவதும் 10 நாள்களுக்கு இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

தலைநகா் தைபே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போா்க் கால தொலைத்தொடா்பு பாதிப்பைச் சோதிக்கும் வகையில் சுமாா் 30 நிமிடங்களுக்கு இணைய வேகம் குறைக்கப்பட்டு, பொதுமக்களின் நகா்ப்புற பாதுகாப்புத் திறனும் இப்பயிற்சியில் பரிசோதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக 2 படைப்பிரிவுகளைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுப் படை வீரா்கள் நடப்பாண்டு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட புதிய ‘எம்1ஏ2டி ஆப்ராம்ஸ்’ போா் பீரங்கிகளும் இப்பயிற்சியில் முதல்முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தன்னாட்சி பிராந்தியமான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அப்பகுதி எல்லைக்கு அருகில் போா் விமானங்களையும் போா்க் கப்பல்களையும் அவ்வப்போது அனுப்பி அழுத்தம் கொடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.