குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மூன்று வாரங்களில் 1000 பேர் பலி... காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா!

எபோலா பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது பற்றி..

News image

காங்கோவில் எபோலா பலிகள் உயர்வு - AP

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:33 pm IST

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பரவல் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பலியானோர் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது.

அல் ஜசீரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின் படி, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் குறைந்தது 1000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டின் ஐந்து மாகாணங்களில் மொத்தம் 4,381 எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 2,011 உயிரிழப்புகளும் அடங்கும்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பரவலில் 11,310 பேர் உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்புக்கு அடுத்தபடியாக இது இரண்டாவது பெரிய பாதிப்பாக உள்ளது.

மூத்த எபோலா ஒருங்கிணைப்பாளர் ஜூலியன் ஹார்னிஸ் வெளியிட்ட என்ஸ் பதிவில்,

எபோலா தொற்று நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐக் கடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த 20 நாள்களில் உயிரிழந்துள்ளனர்.

உயிர்களைக் காப்பாற்றவும் எபோலாவைக் கட்டுப்படுத்தவும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிவாரணப் பணியாளர்கள், அமைப்புகள், அரசுகள், நன்கொடையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிகிச்சை மையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிகளவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

எபோலா வைரஸின் ஒரு வகையான புண்டிபுக்யோ வைரஸ் தொற்றால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலாகும். இது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட தீவிரமான நோயாகும். தற்போது, புண்டிபுக்யோ வைரஸ் வகையால் ஏற்படும் எபோலா நோயைத் தடுக்கவோ அல்லது சிகிச்சையளிக்கவோ எந்தத் தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ அங்கீகரிக்கப்படவில்லை.

More than 2,000 people have died of Ebola in the Democratic Republic of the Congo (DRC) since its outbreak was declared fewer than three months ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.