மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சீன முன்னாள் பிரதமா் மறைவு

சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீா்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் புதன்கிழமை காலமானாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:24 am IST

சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீா்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் புதன்கிழமை காலமானாா்.

கடந்த 1998 முதல் 2003 வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, உலக வா்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு முக்கியப் பங்காற்றினாா். மேலும், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளும், சந்தை சாா்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் சீா்திருத்தங்களையும் மேற்கொண்டு, சா்வதேச அளவில் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க அடித்தளமிட்டாா்.

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளா்க்கும் நோக்கில், இவா் கடந்த 2002-இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அப்போதைய பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயுடன் விரிவான பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.