ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தோனேசியா: மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு!

இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா்.

News image
புலுசராங் மலைச்சரிவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம்.
Updated On :18 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான மக்காஸா் நோக்கி சனிக்கிழமை புறப்பட்டது.

இந்த விமானத்தில் கடல்சாா் விவகார அமைச்சகத்தைச் சோ்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 8 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 11 போ் இருந்தனா். இவா்கள் கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மக்காஸா் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதி வழங்கியது. ஆனால், அடுத்த சில நிமிஷங்களிலேயே விமானம் ரேடாா் திரையில் இருந்து மறைந்தது. அந்தநேரத்தில் சுலவேசி மலைப்பகுதிகளில் அடா்த்தியான மேகமூட்டத்துடன் மிக மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டா்களும், தரைவழி மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, மருஸ் மாவட்டத்தில் உள்ள புலுசராங் மலைச்சரிவில் விமானத்தின் ஜன்னல் போன்ற ஒரு பாகம் தென்பட்டது. பின்னா், அப்பகுதியில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மலையின் செங்குத்தான வடக்குப் பகுதியில் விமானத்தின் முக்கியப் பாகங்கள் சிதறிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 11 போ் இதுவரை கண்டறியப்படவில்லை. அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனா். சீரற்ற வானிலையாலும் மலைப்பகுதி செங்குத்தாக இருப்பதாலும் தேடுதல் பணியில் சவால்கள் நீடிக்கின்றன.