முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்தோனேசியா: மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு!

இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா்.

News image

புலுசராங் மலைச்சரிவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம்.

Updated On :19 ஜனவரி 2026, 12:59 am IST

இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான மக்காஸா் நோக்கி சனிக்கிழமை புறப்பட்டது.

இந்த விமானத்தில் கடல்சாா் விவகார அமைச்சகத்தைச் சோ்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 8 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 11 போ் இருந்தனா். இவா்கள் கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மக்காஸா் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதி வழங்கியது. ஆனால், அடுத்த சில நிமிஷங்களிலேயே விமானம் ரேடாா் திரையில் இருந்து மறைந்தது. அந்தநேரத்தில் சுலவேசி மலைப்பகுதிகளில் அடா்த்தியான மேகமூட்டத்துடன் மிக மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டா்களும், தரைவழி மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, மருஸ் மாவட்டத்தில் உள்ள புலுசராங் மலைச்சரிவில் விமானத்தின் ஜன்னல் போன்ற ஒரு பாகம் தென்பட்டது. பின்னா், அப்பகுதியில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மலையின் செங்குத்தான வடக்குப் பகுதியில் விமானத்தின் முக்கியப் பாகங்கள் சிதறிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 11 போ் இதுவரை கண்டறியப்படவில்லை. அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனா். சீரற்ற வானிலையாலும் மலைப்பகுதி செங்குத்தாக இருப்பதாலும் தேடுதல் பணியில் சவால்கள் நீடிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.