வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு

உறைபனி, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

உறைபனி - AP

Updated On :24 ஜனவரி 2026, 11:49 am IST

அமெரிக்காவில் ஏற்கனவே உறைபனி நிலை ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பனிப்புயல் வீசவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ பகுதியில் வாழும் 15 கோடி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை முதல் பிலடெல்பியா, நியூ யார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் கடும் உறை பனி காரணமாக சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கிறது. இதனால் சாலைகள் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல இடங்களில் பனிமழை பெய்து வருகிறது.

இதனுடன், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 15 கோடி அமெரிக்கர்கள் மிகப்பெரிய பனிப்புயலையும் எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

Story image

AP

உறைபனி, பனிமழை உள்ளிட்டவற்றுடன் கடும் சேதங்களை உருவாக்கும் பனிப்புயல் காரணமாக பல அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலையை அறிவித்துள்ளன.

முன்னெச்சரிக்கையாக அமெரிக்க வான் வழியாகச் செல்லும் விமானங்கள் உள்பட 2,000 விமானங்கள் ரத்து மற்றும் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Story image

AP

பனிப்புயல் காரணமாக, நீண்ட நேரத்துக்கு மின் தடை உள்ளிட்ட அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம். மரங்கள் முறிந்து விழலாம், போக்குவரத்துத் தடை போன்றவை ஏற்படலாம் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உறைபனி காரணமாக, வெறும் 5 நிமிடங்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

வெளியில் வேலை செய்யும் மக்களுக்காக பொதுவிடங்களில் வெப்ப மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.