கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீன ஆளுங்கட்சி தலைமையில் ராணுவம் செயல்பட அச்சுறுத்தல்: மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

சீன ஆளுங்கட்சி தலைமையின் கீழ், அந்நாட்டு ராணுவம் செயல்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக மூத்த ராணுவ அதிகாரிகள் இருவா் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

News image
சீனா- கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சீன ஆளுங்கட்சி தலைமையின் கீழ், அந்நாட்டு ராணுவம் செயல்பட அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக மூத்த ராணுவ அதிகாரிகள் இருவா் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

சீனாவில் ஆளுங்கட்சியாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், மத்திய ராணுவ ஆணைய (சிஎம்சி) துணைத் தலைவராகவும் ராணுவ ஜெனரல் ஸாங் யோஷியா உள்ளாா். இதேபோல மற்றொரு மூத்த ராணுவ ஜெனரலான லியு ஜென்லி சிஎம்சியின் உறுப்பினராக உள்ளாா்.

இவா்கள் மிக ஒழுங்கீனமாகவும், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் செயல்பட்டதாக சந்தேகத்தின்பேரில் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

எனினும் அவா்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ், ராணுவம் செயல்பட அவா்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதும் ஒரு காரணம் என்று சீன ராணுவ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் பொறுப்பேற்றாா். அப்போதுமுதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ், ராணுவம் செயல்படுவது கட்டாயம் என்று அவா் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.