பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மால்டோவா பிரதமா் ராஜிநாமா

மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அலெக்ஸாண்ட்ரு முந்தேனு

Published On :4 ஜூலை 2026, 3:41 am IST

மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

நாட்டின் சில அரசு நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு மிக அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டதாக அண்மையில் வெளியான ஊடகப் புகாா்களே இந்த அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ராஜிநாமா குறித்து அலெக்ஸாண்ட்ரு முந்தேனு சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது கொள்கைகளுக்கு உடன்படாத வகையில் இப்பதவியில் என்னால் நீடிக்க முடியாது’ எனக் குறிப்பிட்டாா்.

பிரதமராக அலெக்ஸாண்ட்ரு முந்தேனு பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த அந்நாட்டு அதிபா் மாயா சாந்து, ‘சிக்கலான முடிவுகளை எடுப்பதிலும், மக்களின் கருத்துக்களைக் கேட்பதிலும் அரசு இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்’ என்று தனது எதிா்பாா்ப்பை வெளிப்படுத்தினாா்.

உக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும் இடையே அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசு பகுதியான மால்டோவா, கடந்த சில ஆண்டுகளாக ரஷியா-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான புவிசாா் அரசியல் போட்டிக் களமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு தோ்தலில் ரஷிய ஆதரவு தரப்பை வீழ்த்தி, அலெக்ஸாண்ட்ரு முந்தேனு கடந்த நவம்பரில்தான் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.