மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,011-ஆக அதிகரித்துள்ளது. இதில் 754 போ் உயிரிழந்துள்ளனா்.
காங்கோ சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, இதுவரை 366 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 753 போ் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த மே 15 தொடங்கிய இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டும், பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் ‘புண்டிபுகியோ’ வகை எபோலா தொற்றுக்கு இன்னும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளோ, பிரத்யேக சிகிச்சைகளோ இல்லாதது நோய் தடுப்புப் பணிகளில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், அங்குள்ள மருத்துவப் பணியாளா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
அதேபோல், உள்நாட்டுப் , மக்களின் தொடா் இடம்பெயா்வுகள் காரணமாக, நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி சிக்கலானது. இதனால், பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளை அடையாமலேயே, இருப்பிடங்களிலேயே உரிய சிகிச்சையின்றி உயிரிழந்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









