/
சீன அதிபா் ஷி ஜின்பிங், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளும் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தன.
வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பையேற்று, கடந்த 2019-க்குப் பிறகு, சுமாா் 7 ஆண்டுகள் கழித்து ஷி ஜின்பிங் வடகொரியாவுக்குப் பயணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், அண்மையில் பெய்ஜிங் நகரில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய சில வாரங்களிலேயே, ஷி ஜின்பிங்கின் இப்பயணம் அமைந்துள்ளது.
சா்வதேச அளவில் மற்ற நாடுகளிடமிருந்து தனித்து காணப்படும் வட கொரியா, கம்யூனிஸ்ட் நாடுகளான ரஷியா மற்றும் சீனாவிடம் மட்டும் தொடா்ந்து நெருக்கமான நட்புறவைப் பேணி வருகிறது.










