தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்தின் மனைவி லதா!பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இலங்கை: இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடல்! இளைஞர் கைது!

இலங்கையில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடிய நபர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

இலங்கையில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடியவர் கைது... - கோப்புப் படம் | AFP

Updated On :5 ஜூன் 2026, 4:58 pm IST

இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகளைப் போற்றி பாடிய இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கடந்த மே 31 அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது பாடகர் ஒருவர் தமிழீழ போராளிக்குழுவான விடுதலைப் புலிகளைப் போற்றி பாடியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த பாடகரைக் கைது செய்த இலங்கை காவல் துறையினர் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை 2 வார நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இருப்பினும், கைதான நபர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, யாழ்ப்பாண காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட 2 பாடல்களை விடுதலைப் புலிகளைப் போற்றும் வகையில் சித்தரித்து அந்த பாடகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விடுதலைப் புலிகளை இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A singer has been arrested by the police in Sri Lanka for singing a song praising the LTTE at a music concert.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.