FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ஈரான்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இல்லை; உதவினால் கடும் நடவடிக்கை! - அமெரிக்க அரசு!

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை...

U.S. Secretary of State Marco Rubio

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ - AP

Published On :3 செப்டம்பர் 2026, 4:32 pm IST

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்திருந்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை கடந்த புதன்கிழமை (செப். 2) சந்தித்து உரையாடினார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், அதிபர் பெஷேஷ்கியன் மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி - அதிபர் பெஷேஷ்கியன் சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இருதரப்புக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி ஈரான் வருவாய் ஈட்ட உதவும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடங்கியது முதல், இருநாடுகள் உடனும் உறவுகளைக் கடைபிடிப்பது இந்தியா போன்ற நடுநிலையான நாடுகளுக்கு சவாலான ஒன்றாகியுள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போரில், தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US Secretary of State Marco Rubio has stated that the US will take strict measures against countries that assist Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.