மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டிய ராகுல்

வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகி மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டினார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:06 am

DIN

வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகி மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்திக்கு சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எளிதாக ராகுல்காந்தியை அணுக இயலாது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வட கர்நாடகத்தில் பேருந்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வரும் ராகுல்காந்தி, மக்கள் தன்னை பார்க்க காட்டும் ஆர்வத்தை கண்டு உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார்.
பேருந்தில் அமர்ந்தபடியே மக்களை பார்த்து கையசைத்து தனது வாழ்த்தைத் தெரிவித்து வந்த ராகுல் காந்தி, ஒரு கட்டத்தில் குஷ்டகி, எல்புர்கா உள்ளிட்ட பல இடங்களில் பேருந்தில் இருந்து இறங்கி சிறப்பு பாதுகாப்புப் படையின் வளையத்தில் இருந்து விலகி மக்களிடம் சென்று கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
ராகுல் காந்தியை நெருங்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, "அவர்களை ஏன் தடுக்கிறீர்கள், என்னிடம் வர அனுமதியுங்கள்' என்று கூறியிருக்கிறார். மக்களை சந்தித்து கைகுலுக்க ஆர்வம் காட்டிய ராகுல்காந்தி, ஒரு சிலரை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். வட கர்நாடகத்தில் ராகுல் காந்தியை பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவோரங்களில் காத்திருந்தனர். ராகுல் காந்தியைக் கண்டதும் அவர்கள் உற்சாகத்துடன் கைகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். இது ராகுல்காந்திக்கு உற்சாகத்தை தந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.