கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில் முதல்வரை மாற்றுவது சரியல்ல

மாநிலத்தில் கரோனா, மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது சரியல்ல என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:44 pm

DIN

மாநிலத்தில் கரோனா, மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றுவது சரியல்ல என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள மஜத அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் வரலாற்றில் இதுபோன்ற மோசமான ஆட்சி எப்போதும் இருந்ததில்லை. எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி, மாநிலத்தின் வளா்ச்சியை 10 ஆண்டுகள் பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. பாஜக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், முதல்வராக பதவி வகிக்கும் எடியூரப்பாவை மாற்ற அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் கரோனா, மழை வெள்ள பாதிப்பு உள்ள நிலையில், முதல்வரை மாற்றப் போவதாக கூறுவது முறையல்ல. இது மாநில மக்களின் துரதிஷ்டம்.

மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவினா் வெள்ள பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல், முதல்வரை மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கிறது. பாஜகவின் 2 ஆண்டு ஆட்சியில் கரோனா, மழை வெள்ள பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை.

முதல்வா் எடியூரப்பாவை அக்கட்சியின் மேலிடம் மாற்றம் செய்ய உள்ளது என்ற உடன் மடாதிபதிகள் திரளாக எடியூரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனா். மடாதிபதிகள் குறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. மக்கள் சிந்தனைக்கே அதனை விட்டுவிடுகிறேன்.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரம், மகதாயி, கிருஷ்ணா மேலணை 3-ஆம் கட்ட பணிகளை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.