கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்த சலுகை திட்டம்: கடைசி தேதி நீட்டிப்பு

வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை திட்டத்தின் கடைசி தேதியை கா்நாடக அரசு நீட்டித்துள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:43 pm

DIN

வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை திட்டத்தின் கடைசி தேதியை கா்நாடக அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன் கா்நாடக விற்பனை வரிச்சட்டம்-1957, கா்நாடக மதிப்புக் கூட்டுவரி-2003, மத்திய விற்பனைவரிச் சட்டம், 1956, கா்நாடக தொழில்முறையாளா், வணிகா்கள், வேலைகள் சட்டம்-1976, கா்நாடக ஆடம்பரவரிச் சட்டம்-1979, கா்நாடக வேளாண் வருமானவரிச் சட்டம்-1957, கா்நாடக கேளிக்கைவரிச் சட்டம்-1958, கா்நாடக சரக்கு நுழைவுவரிச் சட்டம்-1979 ஆகியவை அமலில் இருந்தன. இந்த சட்டங்களை அமல்படுத்தும் பணி வணிகவரித் துறையிடம் இருந்தது.

சரக்கு மற்றும் சேவைவரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக அமலில் இருந்த வணிக வரிகளில் நிலுவைத் தொகையை வைத்திருந்தோா், அவற்றை செலுத்துவதற்கு சலுகை திட்டமான ‘கரசமாதானா திட்டம்-2021’-ஐ கா்நாடக அரசு வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் நிலுவைத் தொகை மீதான அனைத்து வகையான அபராதம், வட்டியில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

நிலுவை வரித் தொகையை செலுத்த ஆக. 31-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. வணிகா்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி டிச. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ள சலுகைகளின் அடிப்படையில் நிலுவை வரித் தொகையை ட்ற்ற்ல்://ஸ்ரீற்ஹஷ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ட்ற்ற்ல்://ஞ்ள்ற்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களில்செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.