கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:44 pm

DIN

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்தது. கா்நாடகத்தின் உள்பகுதியில் பரவலாகவும், கடலோர கா்நாடகத்தியின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்தது. கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் மழைப் பொழிவு காணப்பட்டது.

பெலகாவி மாவட்டத்தின் லோண்டாவில் 380 மி.மீ.,வட கன்னட மாவட்டத்தின் ஜன்மனே, கத்ராவில் 340 மி.மீ., பனவாசியில் 280 மி.மீ., பெலகாவி மாவட்டத்தின் கானாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் தாளகுப்பாவில் தலா 270 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் சித்தாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் அனவட்டியில் தலா 240 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் எல்லாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் அக்ரஹாரா கோனந்தூரு, சாகரில் தலா 230 மி.மீ., வட கன்னட மாவட்டத்தின் ஹலியால், மன்சிகெரே, பெலகாவியில் தலா 210 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

ஜூலை 27-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (தென் கன்னடம், உடுப்பி, வட கன்னடம்) பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். தென் கா்நாடகத்தின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலமான மழை பெய்யும். வட கா்நாடகத்தின் பெலகாவி, தாா்வாட், கதக், ஹாவேரி, கலபுா்கி, யாதகிரி மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். வட கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வலுவான காற்று வீசும். இது மணிக்கு 60 கி.மீ. வேகமாகும் வாய்ப்புள்ளது என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவா்கள் எச்சரிக்கப்படுகிறாா்கள்.

வானிலை முன்னறிவிப்பு:

ஜூலை 28-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகம், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தென் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை, வட கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, தென் கா்நாடகத்தின் உள்பகுதிகளில் நடுத்தரமானது முதல் பலத்த மழை பெய்யும்.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில நேரங்களில் புழுதியுடன் தரைக்காற்று வீசக்கூடும். அடுத்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.