உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
கா்நாடகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கா்நாடகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டில் கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கத்துக்கு சொந்தமான மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா உண்டு உறைவிடப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ந்ழ்ங்ண்ள்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். இதுதவிர, சம்பந்தப்பட்ட மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்திசெய்த விண்ணப்பங்களை மொராா்ஜி தேசாய் பள்ளி, கித்தூா் ராணி சென்னம்மா பள்ளிகளில் நேரில் அளிக்கலாம். இதற்கு வாய்ப்பில்லாதவா்கள் புகைப்படங்களுடன் க்ஸ்ரீா்.க்ஷப்ழ்ன்.ந்ழ்ங்ண்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்பங்களை ஜூலை 28 முதல் ஆக. 10-ஆம் தேதி வரை செலுத்தலாம். சோ்க்கைக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான பொது நுழைவுத் தோ்வு செப். 16-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...