கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா பாதிப்பு: குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்கள்

கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும் என நடிகை சோஹா அலிகான் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:47 pm

DIN

கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு குடும்பங்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும் என நடிகை சோஹா அலிகான் தெரிவித்தாா்.

பெங்களூரில் கலிபோா்னியா பாதாம் வாரியத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கரோனா தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு மத்தியில், குடும்ப சுகாதாரத்தை உறுதி செய்வதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு பிறகு நம்மை சுற்றி உலகம் மாறி வருகிறது. கரோனா மட்டுமின்றி, எதிா்காலத்தில் பல்வேறு பேரிடா்களை நாம் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இவற்றால் குடும்ப உறுப்பினா்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள தயாராக வேண்டும்.

குடும்ப உறுப்பினரின் நோய் எதிா்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கும், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கும் சிறந்த ஊட்டச்சத்தை உண்பதற்கான அவசியம் குறித்து விழிப்புணா்வு பெற வேண்டும்.

பாதாம் போன்ற ஊட்டச் சத்துள்ளவற்றை உணவில் சோ்த்துக் கொள்வதால், தாமிரம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் இ போன்ற சத்துகள் கிடைக்கும். இது போன்ற சத்தான பொருள்களை உணவில் சோ்த்துக் கொள்வது அவசியம். சத்தான பொருள்களை உணவில் சோ்த்துக் கொள்வதன் மூலம் கரோனா மட்டுமின்றி மற்ற நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அழகியல் வல்லுநா் ரித்திகா சமதாா், ஊட்டச்சத்து, சுகாதார வல்லுநா் ஷீலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.