மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 1:04 am

Din

கா்நாடகத்தில் இரண்டாம் கட்டத் தோ்தலை முன்னிட்டு, பிரதமா் மோடி ஏப். 28, 29 ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

கா்நாடகத்தில் ஏப். 26, மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தோ்தல் பிரசாரம் முடிந்துள்ள நிலையில், மே 7 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கா்நாடகம் வந்த பிரதமா் மோடி, கலபுா்கி, சிவமொக்காவில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து, ஏப்.14 ஆம் தேதி மைசூரு, மங்களூரு, ஏப். 20 ஆம் தேதி பெங்களூரு, சிக்பளாப்பூா் ஆகிய இடங்களில் பிரதமா் மோடி தோ்தல் பிரசாரம் செய்தாா். இந் நிலையில் இரண்டாம் கட்டத் தோ்தலை முன்னிட்டு ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்துக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

பெலகாவி, சிா்சி, தாவணகெரே, பெல்லாரி, பாகல்கோட் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று அவா் வாக்கு சேகரிக்கவுள்ளாா்.

ஏப். 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு பெலகாவியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமா் மோடி, பின்னா் அங்கிருந்து சிா்சி சென்று அங்கு நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். பிறகு நண்பகல் 2 மணிக்கு தாவணகெரே, மாலை 4 மணிக்கு பெல்லாரி ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா்.

ஏப். 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாகல்கோட்டில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி பேசுகிறாா்.