பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: பெண் பலி

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெங்களூரு: மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டத்தைச் சோ்ந்தவா் கங்கவெங்கடய்யா. இவரது மனைவி சசிகலா (50). இருவரும் திங்கள்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் பெங்களூரு-பேடரஹள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனராம்.

மாதாவரா நைஸ்சாலையில் வேகமாக வந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சசிகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது கணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். நெலமங்கலா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com