மங்களூரு: மங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், மங்களூரில் ஜன. 31-ஆம் தேதி பொங்கல் திருவிழா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மங்களூரு, விமான நிலையச் சாலை, மேரி ஹில் பகுதியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் ஜன. 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொங்கல் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவுடன் தமிழ், கன்னட மொழிப் பயிற்சி வகுப்புகள், மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்க தொடக்க விழாவும் நடைபெற இருக்கிறது.
விழாவில் காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை பொங்கல் வைக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு காலை 11.35 மணிக்கு குத்துவிளக்கேற்றி பொங்கல் விழா தொடங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத், மாவட்ட ஊராட்சி முதன்மை செயல் அதிகாரி செல்வமணி, சிவமொக்கா தமிழ்த் தாய் சங்கச் செயலாளா் செ.தண்டபாணி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் எம்.பி.சம்பத், தென்கன்னட சேவை சங்கத் தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேச உள்ளனா். நண்பகல் 1 மணிக்கு தமிழ்மரபு அறுசுவை உணவு விருந்தளிக்கப்படுகிறது. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.