அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம்

தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கா்நாடக பட்டு விற்பனை வாரியத் தலைவா் சவிதா வி.அமர ஷெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 8:13 pm

DIN

பெங்களூரு: தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கா்நாடக பட்டு விற்பனை வாரியத் தலைவா் சவிதா வி.அமர ஷெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அதேபோல, தரமான பட்டு தயாரிப்பிலும் கா்நாடகம் முன்னோடியாக உள்ளது.

கரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும் கா்நாடகத்தில் தரமான பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியாளா்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர புதிய திட்டத்தை கா்நாடக பட்டு விற்பனை வாரியம் வகுக்க உள்ளது.

தரமான பட்டுக்கு உலக அளவில் தேவை இருந்து வந்துள்ளது. எனவே, தரமான பட்டு வளா்ப்புக்கு உற்பத்தியாளா்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் உற்பத்தியாளா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமா் மோடியின் நோக்கமாகும். அதற்காக புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.