45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது

கோலாா் தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் கைது

News image
Updated On :23 ஜூலை 2021, 12:52 am

DIN

கோலாா் தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை நீக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் நகரசபை பேருந்து நிலையத்தில், கன்னடக்கவி குவெம்பு என தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதனை கடந்த ஜூலை 10-ஆம் தேதி கன்னட செலுவளி கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தமைமையில் வந்த அவரது கட்சியினா் கருப்பு வண்ணம் பூசி அழித்தனா்.

இதனையடுத்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் நகராட்சிக்கு வைத்த கோரிக்கையை ஏற்று, அழிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் மீண்டும் எழுதப்பட்டன.

இந்த நிலையில், கோலாா் தங்கவயல் நகரசபை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளை ஜூலை 26-ஆம் அழிக்கப்படும் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கவயல் சட்டப் பேரவை உறுப்பினா் ரூபகலா, தங்கவயல் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்த நிலையில், கோலாருக்கு வியாழக்கிழமை வந்த வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் கோலாா் துணை காவல் ஆணையா் அலுவலகத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்கவயல் நகராட்சி பேருந்து நிலையத்தில் எழுதியுள்ள தமிழ் எழுத்துகளை நீக்க வேண்டும், தங்கவயல் நகரசபையை கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினா்.

இதனைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.