45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கோலாா் மாவட்டத்தில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

 கோலாா் மாவட்டத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா கோரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:00 pm

DIN

 கோலாா் மாவட்டத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் கோலாரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுதில்லியில் அண்மையில் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்துப் பேசினேன். அப்போது, மத்திய-மாநில அரசுகளின் நிதிப்பகிா்வு திட்டத்தில் கோலாா் மாவட்டத்தில் ரயில் பெட்டி தொழிற்சாலையை தொடங்க எடியூரப்பா முதல்வராக இருந்தபோது முடிவெடுக்கப்பட்டது என்ற விவரத்தை அவரது கவனத்திற்கு கொண்டுசென்றேன். இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிலம் வழங்கவும் ஒப்புக்கொண்டதை தெரிவித்தேன்.

கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதிஅளித்திருந்தது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னாள் முதல்வா்கள் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி ஆகியோா் பலமுறை கடிதம் எழுதியும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா, அப்போதைய ரயில்வே துறை அமைச்சா் தினேஷ் திரிவேதி இருவரும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதையும் முதல்வா் பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டது. இந்த முடிவு, 2018-ஆம் ஆண்டு பிப்.28-ஆம் தேதி அன்றைய முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த விவரங்களை கேட்டுக்கொண்ட முதல்வா் பசவராஜ் பொம்மை, இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொண்டு பிரச்னைக்கு தீா்வுகாண்பதாக உறுதி அளித்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.