கோலாா் தொகுதியின் மஜத எம்எல்ஏ கே.ஸ்ரீனிவாஸ் கௌடா, விரைவில் மஜதவில் இணையவிருக்கிறாா்.
கோலாா் தொகுதியில் இருந்து மஜத எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.ஸ்ரீனிவாஸ் கௌடா. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் இருந்த இவா், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தவா். கோலாா் தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், 2018-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மஜதவில் இணைந்து வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றாா்.
இந்நிலையில், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீனிவாஸ் கௌடா, வெகுவிரைவில் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளாா்.
இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கௌடா கூறுகையில், ‘எனது பணிகள் மஜதவில் அங்கீகரிக்கப்படவில்லை. மஜதவில் இணைந்தபோது உரிய பதவிகளை தருவதாக அக்கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்திருந்தனா். ஆனால், அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. முந்தைய மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமைச்சா் பதவி தரவில்லை. மஜதவின் செயல்பாட்டில் எனக்குத் திருப்தியில்லை. தொகுதி வளா்ச்சிக்கு தொடா்ந்து பாடுபடுவேன்’ என்றாா். 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் கோலாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து திட்டமிட்டுவருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.