விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏப்.24 முதல் பெங்களூரில் ‘விளையாடு இந்தியா’ போட்டிகள்

பெங்களூரில் ஏப். 24-ஆம் தேதிமுதல் ‘விளையாடு இந்தியா’ போட்டிகள் நடக்கவிருக்கின்றன என்று இளைஞா் அதிகாரபரவலாக்கல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் கே.சி.நாராயண கௌடா தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:05 pm

DIN

பெங்களூரில் ஏப். 24-ஆம் தேதிமுதல் ‘விளையாடு இந்தியா’ போட்டிகள் நடக்கவிருக்கின்றன என்று இளைஞா் அதிகாரபரவலாக்கல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் கே.சி.நாராயண கௌடா தெரிவித்தாா்.

ஜெயின் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மத்திய இளைஞா்நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில் பெங்களூரில் ஏப்.24-ஆம் தேதிமுதல் மே 3-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாடு இந்தியா போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இதுகுறித்து அதிகாரபரவலாக்கல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் கே.சி.நாராயணகௌடா கூறியதாவது:

‘பெங்களூரில் ஏப்.24 முதல் மே 3-ஆம் தேதி வரை விளையாடு இந்தியா போட்டிகள் நடக்கவிருக்கின்றன. பெங்களூரில் உள்ள ஜெயின் குளோபல் பல்கலைக்கழகம், ஜெயின் விளையாட்டு பள்ளி, கண்டீரவா விளையாட்டுத் திடல், ஃபீல்டு மாா்ஷன்ல் கரியப்பா ஹாக்கி விளையாட்டுத் திடல் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய மையம் உள்ளிட்ட 14 இடங்களில் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இந்த போட்டிகளில் நாட்டின் பல்வேறுபகுதிகளில் உள்ள 189 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 4,529 தடகளவீரா்கள் கலந்து கொள்ளவிருக்கிறாா்கள். 20 வகையான போட்டிகள் நடத்தி, 275 தங்கப்பதக்கங்கள் அளிக்கப்படும்.

2021-ஆம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டிய இந்த போட்டி, கரோனா காரணமாக தள்ளிப்போடப்பட்டது. நமதுநாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கும் நோக்கில், முதல்முறையாக யோகா, மல்லா்கம்பம் ஆகிய போட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த போட்டியை ஏப்.24-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தொடக்கிவைக்கிறாா்.

போட்டிக்கு ரூ. 52கோடி செலவாகும். இதில் ரூ.35 கோடியை மத்திய அரசு வழங்கவிருக்கிறது. இந்த போட்டிகள் தூா்தா்ஷன் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி, சமூகவலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள வரும் வீரா்களுக்காக ஜெயின் பல்கலைக்கழகத்தில் உள்ள 3500 அறைகள், வாழும் கலையில் உள்ள 1500 அறைகள் பயன்படுத்தப்படும். கண்டீரவா விளையாட்டுத்திடலில் உள்ள 700 அறைகளும் பயன்படுத்தப்படும். இந்த போட்டியில் 7500-க்கும்மேற்பட்டோா் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.