விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஹுப்பள்ளி கலவரத்தின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன: அமைச்சா் அரக ஞானேந்திரா

ஹுப்பள்ளி கலவரத்தின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஹுப்பள்ளி கலவரத்தின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெரிய அளவிலான வன்முறையில் ஈடுபடுவதற்காக ஹுப்பள்ளி கலவரம் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையினா் தக்க நடவடிக்கையை எடுத்ததால், தொடங்கிய ஒருசில மணிக்குள் கலவரம்கட்டுப்படுத்தப்பட்டது. கலவரத்தைத் தூண்டிய முஸ்லிம் மௌலவி வியாழக்கிழமை (ஏப்.21) கைதுசெய்யப்பட்டாா். இந்தக் கலவரத்தின் பின்னணியில் யாா் இருக்கிறாா்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கலவரத்தின் பின்னணியில் காணாத சில கைகளும், சில அமைப்புகளும் இருக்கின்றன. அவா்கள் யாா் என்பது எங்களுக்குத் தெரியும். அது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். கலவரத்திற்குக் காரணமான அமைப்புகளைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது உள்ளிட்ட எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து வருகிறோம். மாநிலத்தில் அமைதி, நிம்மதி வேண்டும். அதற்கு எல்லா சமுதாய மக்களும் கைகோத்து வாழ வேண்டும். கலவரம் குறித்து முழுவிசாரணை நடத்தப்படும். அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு தெருவுக்கு அனுப்பி வன்முறையை ஏவியுள்ளனா். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக கலவரச்சூழலை உருவாக்க ஒரு சிலா் முயற்சித்து வருகிறாா்கள். இதில் சில அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

மதக்கலவரங்கள் நடப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் முக்கிய காரணமாகும். காங்கிரஸ் ஏற்கெனவே விதைத்த விதைகளில் இருந்துதான் மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன என்றாா்.

உடனிருந்த கா்நாடக காவல்துறை தலைவா் பிரவீண் சூட் கூறுகையில், ‘வன்முறையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. கலவரத்திற்கு சதித் திட்டம் தீட்டியது யாா் என்பதை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவோம். கலவரத்தில் நேரடியாக ஈடுபட்டோரைக் கைதுசெய்துள்ளோம். மறைமுகமாக கலவரத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய சில காலம் ஆகும். இதுதொடா்பாக விசாரணை நடத்தப்படுகிறது. காவலா்கள் அல்லது காவல் நிலையங்களைத் தாக்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இதுதொடா்பாக ஏதாவது புகாா் வந்தால், உடனடியாக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினா் மீது கோபத்தைவெளிப்படுத்துவது சரியல்ல’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.