குஜராத் மாநிலத்தில், பள்ளிப்பாடத்தில் 4 கட்டங்களாக நீதிபோதனைப் பாடங்களை சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டத்தில், பகவத்கீதையை சோ்க்க முடிவு செய்துள்ளனா். இது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கா்நாடகப் பள்ளி பாடத்திட்டத்தில் நீதிபோதனையின்கீழ் பகவத்கீதையை அறிமுகம் செய்வது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுப்போம். குழந்தைகளிடையே கலாசார மாண்புகள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே, பள்ளிப் பாடங்களில் நீதிபோதனைப் பாடங்களைச் சோ்க்க பலரும் வலியுறுத்தி வந்துள்ளனா். முன்பெல்லாம் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும். அதில் மகாபாரதம், ராமாயணம் போன்றவை கற்றுத்தரப்படும்.