இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தோ்தல் பத்திர வழக்கு: நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான தோ்தல் பத்திர வழக்கு...

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் - Center-Center-Chennai

Published On :

பெங்களூரு: தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

ஜனாதிகாரா சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்திருந்த தனியாா் புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு செப். 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன் பேரில், பெங்களூரு, திலக் நகா் காவல் நிலையத்தில் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120பி, 34 ஆகியவற்றின் கீழ் மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜகவின் தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) செப். 28-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ரத்துசெய்யக் கோரி, பாஜக மாநில முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி நாகபிரசன்னா, அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.