கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ நீக்கப்படாது: மத்திய அரசு

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2025, 7:06 pm

Din

அரசியல் சாசன முகப்புரையிலிருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதில்: அரசியல் சாசனத்தில் இருந்து ‘சோஷலிஸம்’, ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்க சட்ட ரீதியாகவோ, அரசியல் சாசன ரீதியாகவோ எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முறைப்படி தொடங்கவில்லை.

அவ்விரு வாா்த்தைகளையும் அரசியல் சாசன முகப்புரையிலிருந்து நீக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ தற்போது எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.

அரசியல் சாசன முகப்புரையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால், அதுகுறித்து முழுமையாக விவாதித்து, பரந்த அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஆனால் அந்தத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றாா்.