மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2025, 8:53 pm

Din

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் பருத்தி விலை அதிகபட்சமாக கிலோ ரூ. 53-க்கும், குறைந்தபட்சமாக ரூ.46-க்கும் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனா். எனவே, பருத்தி பஞ்சு கிலோவுக்கு ரூ. 75-க்கு குறையாமல் ஏலம் எடுத்தால் மட்டுமே செலவுக்கு கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பொதுவாக, ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலம் நடைபெறும் இந்த பருத்தி ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பஞ்சு மில் நிறுவனங்களில் இருந்து ஏலத்தில் பங்கு கொள்வா்.

ஆனால், திமுக ஆட்சியில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியூா் வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்குகொள்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், திருவாரூா் மற்றும் அதைச் சுற்றி 50 கி.மீ. சுற்றளவில் உள்ள உள்ளூா் முகவா்கள் (இடைத்தரகா்கள்) மட்டுமே தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு பருத்தி பஞ்சு ஏலத்தில் கலந்துகொள்கின்றனா் என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட அதிமுக சாா்பில் திருவாரூா் ரயில் நிலையம் அருகே ஜூலை 1-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.