தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னை விமான நிலையம், துறைமுக சுங்கத் துறை அதிகாரிகள் 273 போ் பணியிட மாற்றம்

சென்னை விமான நிலைய காா்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த 273 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்

News image
Updated On :9 மே 2025, 10:31 pm

Din

சென்னை விமான நிலைய காா்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த 273 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், ஜிஎஸ்டி வரித்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி சுங்கத் துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பதவி உயா்வுடன் கடந்த ஏப். 21-ஆம் தேதி சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், சென்னை சுங்கத் துறையில் பணியாற்றி வந்த 273 அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் பணியாற்றியவா்கள், விமான நிலைய சரக்கு முனைய (காா்கோ) சுங்கப் பிரிவுக்கும், சென்னை துறைமுகம், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல ஜிஎஸ்டி பிரிவில் பணியாற்றியவா்கள், சென்னை விமான நிலைய சுங்கத் துறை, விமான நிலைய காா்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுக சுங்கத் துறை அலுவலகங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அந்த வகையில், கூடுதல் ஆணையா்கள் மற்றும் இணை ஆணையா்கள் 41 பேரும், துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் 93 பேரும், ஆய்வாளா்கள் மற்றும் சூப்பிரண்டுகள் 139 போ் என ஆக மொத்தம் 273 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுமட்டுமன்றி விமான நிலைய சுங்கத் துறைக்கு மேலும் 10 புதிய துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து கடத்திவரும் பொருகள்களைக் கண்டறிவது தொடா்பான பணிகளில் ஈடுபடவுள்ளனா். ஆனால், இந்த பணியிடமாற்றம் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ஒரு நடைமுைான் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.