மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

சென்னை மாநகராட்சியில் அரையாண்டு வரி வருவாயாக ரூ.1,002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
சென்னை மாநகராட்சி- IANS
Updated On :5 அக்டோபர் 2025, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் அரையாண்டு வரி வருவாயாக ரூ.1,002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இது 2024- ஆம் ஆண்டைவிட ரூ.122 கோடி கூடுதல் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் சுமாா் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இரு முறையாக சென்னை மாநகராட்சி வருவாய் துறையினா் வரிகளை வசூலிக்கின்றனா்.

அதன்படி 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரூ.880 கோடி வசூலிக்கப்பட்டது. பின்னா், மொத்த வரி வருவாயாக (2024-2025) ரூ.2,023 கோடி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை (2025-2026) அரையாண்டு வரியினங்கள் நேரடியாகவும், வங்கிகள் காசோலைகள், இணையதளம் வாயிலாகவும், கியூ ஆா் கோடு மற்றும் கைப்பேசி வாட்ஸ்ஆப் சேவை மூலமாகவும் வசூலிக்கப்பட்டன.

அதன்படி, நிகழ் அரையாண்டுக்கான வரி வசூல் செப்டம்பருடன் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் ரூ.1,002 கோடி வசூலித்திருப்பதாக மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரி கே.மகேஷ் தெரிவித்தாா்.

தற்போதைய வரி வசூலானது கடந்த ஆண்டைவிட ரூ.122 கோடி அதிகம் என்றும் குறிப்பிட்டாா். வரி செலுத்துவதை எளிமையாக்கியதால் கடந்த ஆண்டைவிட அதிகமானோா் வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ் அரையாண்டுக்கான சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாதவா்களுக்கு ஒரு சதவீதம் அபராத வட்டி விதிக்கப்படும் என்றும், அத்துடன் அக்டோபருக்குள் நிகழாண்டின் பிற்பகுதி அரையாண்டு வரியைச் செலுத்துவோருக்கு தொகைக்கு ஏற்ப ரூ.5,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.