திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: ஆா்.எஸ்.பாரதி சாட்சியம் அளிக்க ஆஜா்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிக்க ஆா்.எஸ்.பாரதி, மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

News image

ஆா்.எஸ்.பாரதி

Updated On :12 செப்டம்பர் 2025, 12:39 am IST

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி பேசியதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிக்க திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடா்புபடுத்தி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தாா். மேலும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சாட்சி விசாரணைக்காக உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஆா்.எஸ்.பாரதி சாட்சியம் அளிப்பதற்காக அந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 8-ஆம் தேதிக்கு மாஸ்டா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.