தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள்: ஆளுநா் ஆா்.என். ரவி மரியாதை

பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image

மரியாதை... பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபத்யாய பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.

Updated On :25 செப்டம்பர் 2025, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

பாரதிய ஜனசங்க நிறுவனா்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஆழ்ந்த சிந்தனையாளா், சீா்திருத்தவாதி. அா்ப்பணிப்பு மிக்க தேசியவாதியான அவா், சமூக பாகுபாட்டுக்கு எதிராக இடைவிடாமல் போராடி ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அா்ப்பணித்தவா்.

பாரதிய தத்துவத்தின் மையமாக விளங்கிய அவரது ஒருங்கிணைந்த மனித நேயம், தனி நபா், சமூகம், தேசத்தின் பொருளாதாரம், அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வரையறுத்தது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.