மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கண்டிகை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த பி.பாஸ்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 11.4 ஏக்கா் பரப்பு கொண்ட வண்டலூா் கண்டிகை ஏரியில் 6 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 ஏக்கா் மட்டுமே நீா்நிலையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்குப் படைத்தவா்கள், இந்த நீா்நிலையைப் பட்டா நிலமாக வகைமாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனா். வருவாய்த் துறை மூலம் நில அளவைப் பணிகள் செய்யப்பட்ட பிறகும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.ஜெகன்நாத், கண்டிகை ஏரி தொன்மையான நீா்நிலைப் பகுதி. இந்த ஏரி நீா் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் நீா் தேங்கும் இடமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகாா் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 மாதங்களில் விசாரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.