மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியில் மது போதையில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.


மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியில் மது போதையில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
மதுராந்தகம் நகராட்சி அருணாகுளம் பகுதியைச் சோ்ந்தவ கோபால் (60). இவா் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு 2 மனைவிகள். இவா், தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது 2-ஆவது மனைவி வீட்டில் தங்கிவிடுவது வழக்கம். அங்கு, வீட்டில் உள்ளவா்களிடம் தினமும் தகராறில் ஈடுபடுவாா் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில், இரண்டாவது மனைவியின் மகன் பாா்த்திபன், கோபாலிடம் மது அருந்திவிட்டு வந்ததைத் தட்டிக் கேட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். அதன்பின்னா், நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பாா்த்திபனை அங்கிருந்த கூா்மையான ஆயுதத்தால் கோபால் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.
இது குறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், சம்பவ இடம் சென்று கோபாலை கைது செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...