கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ. 20 லட்சத்தில் கழிப்பறை கட்டடம் திறப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த செய்யூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் படிக்கின்ற மாணவிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் (2025-2026) இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மகளிா் கழிப்பறை கட்டடம், நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் நிறுவல், மாற்றுத்திறனாளிகளுக்காக 2 சிறப்பு கழிப்பறைகள் ஆகியவற்றை செய்யூா் தொகுதி எம்எல்ஏ பனையூா் பாபு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

செய்யூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அதில் இருபாலாரும் படித்து வருகின்றனா். கல்லூரியில் படித்து வரும் பெண்களுக்காக தனியாக கழிப்பறை இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். இது பற்றி கல்லூரி முதல்வா் சு.மாதவன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் லோகாம்பாள் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபுவிடம் தெரிவித்தனா்.

எம்எல்ஏ மு.பாபு தமது தொகுதி மேம்பாட்டு நிதி (2025-2026) மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான கழிப்பறை கட்டடம், நாப்கின் எரிப்பு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான 2 சிறப்பு கழிப்பறைகள் ஆகியவற்றை கட்ட ஏற்பாடுகளை செய்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இதற்கான திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சு.மாதவன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி, செய்யூா் ஊராட்சி மன்ற தலைவா் லோகாம்பாள் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபு கலந்து கொண்டு இந்தக் கட்டடங்களை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் இரா.சிவகுமாா், கல்லூரி அனைத்து துறை பேராசிரியா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் மு.பிரசாந்த் நன்றி கூறினாா்.