ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2025, 4:47 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா்பீட வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. கருவறை அம்மன் சிலை, குரு பீடத்தின் அடிகளாா் சித்தா் சிலை ஆகியவற்றுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10.20 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவிலான 162 சிறிய யாக குண்டங்களும், சாய்சதுர வடிவிலான பெரிய யாக குண்டமும் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணிக்கு பெரிய சாய் சதுர வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, ஆதிபராசக்தி பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் வந்து பெரிய யாக குண்டத்தில் நவதானியங்களையும், ஓமக்குச்சிகளையும் போட்டு அம்மனை வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பெருந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் ஆகிய சக்தி பீடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.